
நிலநடுக்கம் பதிவு :
Delhi Earthquake Today : இதுபற்றி தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ” ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியை மையமாக கொண்டு காலை 9:04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.4. என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காஜியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
15 வினாடிகள் நீடித்த நிலநடுக்கம் :
15 வினாடிகள் வரை நீடித்த நிலநடுக்கத்தால், வீடுகளில் இருந்த பொருட்கள் லேசாக ஆடுவதை கண்ட பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து சாலைகளுக்கு வந்தனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நிலநடுக்கத்தை நன்றாகவே உணர முடிந்ததாக பொதுமக்கள் கூறினார்.
மேலும் படிக்க : அரைவட்ட வடிவில் மாணவர் இருக்கை : மாற்றத்தை ஏற்படுத்திய கேரள படம்
சேதம் ஏதும் ஏற்படவில்லை :
உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதி, ஹரியானாவில் ஒருசில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், உயிர்ச்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம்(Earthquake) ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகர்வு :
நிலநடுக்க பாதிப்பு ஏற்படும் பகுதியில் டெல்லி இல்லாவிட்டாலும், பூமிக்கு அடியில் இருக்கும் அடுக்குகள் நகர்ந்ததால், நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க : வட்டி விகித மாற்றங்களில் இந்திய வங்கிகள் : பிசிஜி ஆய்வு வெளியீடு