ஈரான்-இஸ்ரேல் போர் : தினமும் 5 கோடி இழப்பை சந்திக்கும் நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் நீடித்து வரும் போர்
US Israel Iran War Impact on India Exports : ஈரான் இஸ்ரேல் அமெரிக்க நீடித்து வரும் போரால் ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) வெளியிட்ட அறிக்கையின்படி ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ள
தொடர்ந்து சரிவை சந்திக்கும் வணிகம்
நீடித்து வரும் போர் காரணமாக பல்வேறு வகையான பொருட்களுக்கு ஏற்றுமதியானது பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிஆகி வெளிநாடுகளுக்கு சென்ற கப்பல்களும் தொடர் போரால் இடையிலே நின்று கொண்டு இருக்கிறது.
பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு
தொடர் இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளநிலையில் துறைமுகங்களில் 2 லட்சம் மற்றும் நடு வழியில் 2 லட்சம் என மொத்தம் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க :ஈரான்-இஸ்ரேல் போர் : தினமும் 5 கோடி இழப்பை சந்திக்கும் நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள்
உயர்ந்த கப்பல் போக்குவரத்து கட்டணம்
நீடித்து வரும் போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டு பிரீமியம் மற்றும் போர்க்கால கூடுதல் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால் சர்வதேச சரக்கு போக்குவரத்து கட்டணம் 15-20% வரை அதிகரித்துள்ளது. மேலும் கப்பல் எரிபொருள் விலை ஒரு டன்னுக்கு 520 டாலரிலிருந்து 580 டாலராக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு
தொடர் போர் பதற்ற சூழலால் 2 மணி நேரத்தில் பாசுமதி அரிசியின் விலை 7-10% வரை சரிவை சந்தித்துள்ளது . இது ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதனத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர் பதற்றம் காரணமாக கப்பல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் துறைமுகங்களில் தேங்கும் சரக்குகளுக்கான சேமிப்பு மற்றும் தாமதக் கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எண்டு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவிர்க்க முடியாத சூழலாக’ அறிவிக்க வேண்டும்.
வளைகுடா நாடுகளுக்கு பொருட்களை ஏற்றி கொண்டு சென்ற கப்பல்கள் இடையில் நின்று கொண்டிருக்கிறது .இதனால் ஏற்றுமதியாளர்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர்.
பாதியில் நிற்கும் சரக்குகளைத் திருப்பி அனுப்ப அல்லது வேறு இடத்துக்கு மாற்ற இந்த நெருக்கடியை ஒரு ‘தவிர்க்க முடியாத சூழலாக’ அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
மேலும் படிக்க :7வது நாளாக தொடரும் போர் : நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம், ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்பு