
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம், விலை குறையும் :
Edappadi Palanisamy on GST 2.0 Reforms : டெல்லியில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், GST-யில் நடைமுறையில் உள்ள நான்கு அடுக்குகளை, இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மறு சீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி, வரும் 22ம் தேதி முதல் 5 மற்றும் 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். இதன் காரணமாக உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறைகிறது.
அதிமுக மனமார வரவேற்பு :
மத்திய அரசின் இந்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்து இருக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக சார்பாக, ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
பிரதமருக்கும், நிர்மலாவுக்கும் நன்றி :
மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்குத் தலைமைத்துவம் வகித்ததற்காக பிரதமர் மோடிக்கும், ஜிஎஸ்டி வரி விகிதத்தை கட்டமைக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும்(EPS on Nirmala Sitharaman) நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் படிக்க : GST 2.O Reforms : 2 அடுக்குகளாக குறைப்பு: 22ம் தேதி முதல் அமல்
பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் :
அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் பொருட்கள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) நிவாரணம் வழங்கி இருப்பது முன்னேற்றத்தை உறுதி செய்யும். இது நுகர்வோர் நம்பிக்கையை ஊக்கப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami) வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்.
=============