உயர்கல்வியை சீரமைக்க நடவடிக்கை : அரசுக்கு பாலகுருசாமி வேண்டுகோள்

Former VC Balagurusamy Request To CM MK Stalin : தமிழகத்தில் உயர் கல்வியை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Anna University Former VC Balagurusamy Request To CM MK Stalin on Higher Education
Anna University Former VC Balagurusamy Request To CM MK Stalin on Higher Education
2 min read

பல்கலைகளுக்கு நெருக்கடியான சவால்கள்

Former VC Balagurusamy Request To CM MK Stalin : அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தரும், மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் முன்​னாள் உறுப்​பினரு​மான பால​குரு​சாமி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்​பி​யுள்ள மனு​வில், ” தமிழக பல்​கலைக்​கழகங்​கள் நெருக்​கடிமிக்க சவால்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றன. அதற்கு விரைந்து தீர்வு காணா​விட்​டால், உயர்​கல்வி நிறு​வனங்​களின் தரம், தன்​னாட்சி அந்​தஸ்​து, உலகளா​விய போட்​டித் திறன் அனைத்​தும் பாதிக்​கப்​படும்.

தேசிய கல்விக் கொள்கை அவசியம்தான் :

தமிழக பல்​கலைக்​கழகங்​களில் தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்​து​வ​தில் புரிதலும், சரி​யான தெளி​வும் இல்​லை. தேசிய கல்விக் கொள்​கைக்கு(National Education Policy) மாற்​றாக, அதன் இலக்​கு​களை அடை​யத்​தக்க வகையி​லான மாற்று கல்விக் கொள்​கை​யும் இது​வரை செயல்​படுத்​தப்​பட​வில்​லை. இந்த விஷ​யத்​தில் கொள்கை முடிவு எடுக்க முடி​யாமல் இருந்​தால், அது மாநில பல்​கலைக்​கழகங்​களில் குழப்​பத்தை உண்டாக்கும். தமிழ கத்​தின் சமூக, பொருளா​தார, மொழி சூழலுக்கு ஏற்ப தேசிய கல்விக் கொள்கை இலக்​கு​களை அடைவதற்கான ஒரு தெளி​வான செயல் திட்​டத்தை உரு​வாக்க வேண்​டியது அவசர, அவசி​யம்.

காலி பணியிடங்களை நிரப்புக :

தமிழகத்​தில் பெரும்​பாலான பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​கள்(Vice Chancellor), நிரந்தர பதி​வாளர்​கள், தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர்கள், கணக்கு அலு​வலர்​கள் இல்​லை. சரி​யான தலைமை இல்​லா​விட்​டால், பல்​கலைக்​கழகம் சரி​யாக செயல்பட முடி​யாது. பல ஆண்​டு​களாக பணி நியமனம் இல்​லாத​தால், ஆசிரியர் பணி​யிடங்​களும் காலி​யாக உள்​ளன. தற்​காலிக முறை​யில் நியமித்தால், கற்​பித்​தல், ஆராய்ச்சி பணி சரி​யாக இருக்​காது.

நிர்வாகத்தில் அிதிகாரிகள் தலையீடு :

இதனால், மாணவர்​கள் பெரிதும் பாதிக்​கப்​படு​வார்​கள். ஆசிரியர்​கள், அலு​வலர்​களுக்கு ஊதி​யம் வழங்க முடி​யாத அளவுக்கு பல்கலைக்​கழகங்​கள் நிதி நெருக்​கடி​யில் சிக்​கி​யுள்​ளன. அரசு அதி​காரி​களின் அளவுக்கு மீறிய தலை​யீடு, பல்​கலைக்​கழக நிர்வாகத்​தை​யும், அதன் தன்​னாட்சி அந்​தஸ்​தை​யும் பாதிக்​கும். இன்​றைய கல்​வி, வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப பாடத் திட்​டங்​கள் மாற்றி அமைக்​கப்​பட​வில்​லை.

தமிழக பல்கலைகள் பின்தங்கல் :

ஆராய்ச்​சி, காப்​புரிமை, சர்​வ​தேச கல்வி நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்​படு​வது ஆகிய​வற்​றில் தமிழக பல்​கலைக்​கழகங்​கள் பின்​தங்கி உள்​ளன. இப்​படிப்​பட்ட சூழலில், உயர்​கல்​வியை சீரமைக்க சில யோசனை​களை முன்​வைக்​கிறேன்.

மேலும் படிக்க : ’வெற்றி நாயகன் ராஜேந்திர சோழன்’ வரலாறு பேசும் கங்கை கொண்ட சோழபுரம்

தமிழக அரசுக்கு யோசனைகள் :

* உயர்​கல்​வியை மதிப்​பீடு செய்​ய​வும், சீரமைப்​புக்​கான செயல் திட்​டங்​களை பரிந்​துரைக்​க​வும் மாநில உயர்​கல்வி சீரமைப்பு செயல் குழுவை அமைக்க வேண்​டும்.

* ஆசிரியர் நியமனங்​களில் வெளிப்​படைத் தன்​மை, காலக்​கெடு​வுடன் கூடிய நியமன முறையை அறி​முகம் செய்ய வேண்​டும்.

* பல்​கலைக்​கழகங்​களின் ஆராய்ச்​சி, உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, தொழில்​நுட்ப வளர்ச்சிக்​கான நிதியை உயர்த்த வேண்​டும்.

* தற்​போதைய சூழலுக்கு ஏற்ற பாடத் திட்​டங்​களை உரு​வாக்​கும் வகை​யில், பல்​கலைக்​கழகங்​களும், தொழில் நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்பட செய்ய வேண்​டும்.

* எனவே, உயர்​கல்​வி சீரமைப்​புக்​கு உறு​தி​யாக, தைரிய​மாக, விரைந்​து நடவடிக்​கை எடுக்​க வலி​யுறுத்​துகிறேன்​” இவ்​​வாறு அந்த மனுவில் பாலகுருசாமி கேட்டுக் கொண்டுள்ளார்​.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in