பொறுப்பு DGP நியமன விவகாரம் : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

Annamalai Condemns DMK on DGP Appointment : டிஜிபி நியமன விவகாரத்தில், திமுக அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு இருப்பதாக, அண்ணாமலை சாடி இருக்கிறார்.
BJP Ex Leader Annamalai Condemns DMK Government on In charge DGP G Venkataraman Appointment
BJP Ex Leader Annamalai Condemns DMK Government on In charge DGP G Venkataraman Appointment
1 min read

தமிழக காவல்துறை டிஜிபி :

Annamalai Condemns DMK on DGP Appointment : தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி டிஜிபி ராஜிவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குனர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோட் உட்பட, 11 அதிகாரிகளின் பெயர்கள் டிஜிபி பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இவர்களில் ஒருவர் டி.ஜி.பி., யாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் :

ஆனால், பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமனை(DGP G Venkataraman IPS) தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து அவர், 33வது டிஜிபியாக நேற்று பொறுப்பேற்றார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, 1994ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். பெரம்பலுார், சேலம், மதுரை, மத்திய புலனாய்வு பிரிவுகளில் முன்பு பணியாற்றியவர். அவருக்கு மூத்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்பு - டிஜிபிக்கள் புறக்கணிப்பு :

டிஜிபி தேர்வு பட்டியலில்(DGP Selection List) இடம் பெற்றிருந்த, டிஜிபி அந்தஸ்து அதிகாரிகள் எட்டு பேர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் வெங்கட்ராமன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தமிழக காவல்துறையில் இது பேசு பொருளாகி இருக்கிறது.

பொறுப்பற்ற திமுக அரசு :

இந்தநிலையில், கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ முதல்​வர் ஸ்டா​லின் 2026-ம் ஆண்டு ஓய்​வு​பெறப் போகிறார். அதனால் பிரிவுபச்​சார விழா​வாக ஜெர்​மனி, லண்​ட​னுக்கு சென்​றுள்​ளார். ஆட்​சிக்கு வந்​தால் இந்து கோயில்​களை புனரமைக்க ஆண்​டு​தோறும் ரூ.1,000 கோடி ஒதுக்​கப்​படும் என்​றனர். நான்கு ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில் 155 கோடி ரூபாய் மட்​டுமே ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

டிஜிபி விவகாரத்தில் திமுக அரசியல் :

தமிழகத்​தில் பொறுப்பு டிஜிபி-​யாக ஒரு​வர் பொறுப்​பேற்​றுள்​ளார். சங்​கர் ஜிவால் பணி ஓய்வு பெற்ற நிலை​யில் 6 பேர் காத்​திருப்பு பட்​டியலில் உள்​ளனர். அவர்​களில் முதல் மூவரில் ஒரு​வர் பொறுப்​பேற்க வேண்​டும்.

மேலும் படிக்க : தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத் தலைவர் : டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்

இந்த விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றம் தலை​யிட்​டும் ​கூட, டிஜிபி​யாக ஒரு​வரை நியமிக்​க​வில்​லை. 9வது இடத்​தில் உள்ள ஒரு​வரை பொறுப்பு டிஜிபி​யாக நியமித்​துள்​ளனர். டிஜிபி விவ​காரத்​தில் திமுக அரசு பொறுப்​பற்ற முறை​யில் செயல்​பட்​டுள்​ளது.

பெண்​கள் பாது​காப்பு விஷ​யத்​தில் சென்னை 21வது இடத்​தில் உள்​ளது. பெண்​களுக்கு பாது​காப்பு இல்லை என்​ப​தையே இது காட்​டு​கிறது”. இவ்​வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in