கருப்புக்கொடி காட்டியதற்கு குண்டர் சட்டமா?: கே.எஸ்​.அழகிரி கண்டனம்

K S Alagiri on TN Police : மக்​கள் பிரச்​சினை​களுக்​காக போராடி வரும் காங்​கிரஸ் பிர​முகர் அப்​ரோஸ், குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளதற்கு கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Former Congress Leader K S Alagiri Condemn TN Police on Arrest for Protest
Tamil Nadu Former Congress Leader K S Alagiri Condemn TN Police on Arrest for Protest
1 min read

K S Alagiri on TN Police : காங்​கிரஸ் பிர​முகர் அப்​ரோஸ், மாநகர காவல் ஆணை​யருக்கு கருப்புக்கொடி காட்​டிய​தாக கைது செய்​யப்​பட்​டு, குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.வேப்​பேரியில் உள்ள அப்​ரோஸின் இல்​லத்​துக்கு தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி நேரில் சென்​று, அவரது குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறி​னார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை மாநகர காவல்​துறைக்கு சிந்​திக்​கும் திறன் இல்​லை. தமிழக காங்​கிரசுக்கு எதி​ராக காவல்​துறை கெடு​தல் செய்​திருக்​கிறது. அப்​ரோஸ் கருப்​புக் கொடி(Black Flag Protest) காட்டி இருந்​தா​லும் தவறில்​லை.

மேலும் படிக்க : விவசாயிகள் வயிற்றில் அடிப்பது நல்லாட்சியா?: திமுக அரசுக்கு கேள்வி

நாட்​டின் பிரதமருக்​கு, குடியரசுத் தலை​வருக்கு எதி​ராக கருப்​புக் கொடி காட்​டு​கிறோம். அவர்​களெல்​லாம் சிரித்​துக் கொண்டே கடந்து செல்​கின்​றனர். காவல்​துறை ஆணை​யருக்கு கருப்​புக் கொடி காட்​டி​னால் அவ்​வளவு பெரிய குற்​ற​மா? ஜனநாயக நாட்​டில் அதற்கு இடம் இல்லையா? தமிழகத்​தில் ஜனநாயகம் இருக்​கிற​தா?

தமிழக முதல்​வர் மு. க. ஸ்டாலின் அனைத்​தை​யும் அனுசரித்து செல்​கிறார். எல்லாவற்றையும் சரிவர செய்து வரு​கிறார். அவருடைய ஆட்​சி​யில் காவல்​துறை இப்​படி செய்​கிறார்​கள் என்​றால் இது எவ்​வளவு பெரிய சர்​வா​தி​காரம். மாநகர காவல் ஆணையர் மனிதரா அல்​லது கடவுளா? இல்​லை, அதற்​கும் மேலா? ஆணை​யர் வரும்​போது கருப்​புக் கொடி காட்​டக் கூடாது என்று எந்த சட்​ட​மும் இல்​லை. இதுகுறித்து எங்​கள் தலை​வர்​களு​டன் கலந்து பேசி முதல்​வரை சந்​திக்க இருக்​கிறோம்.

இவ்வாறு கே.எஸ். அழகிரி(K. S. Alagiri) தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in