கழிவறை பராமரிப்புக்கு 1,000 கோடி! ஆனால் தரம்? : நயினார் காட்டம்

Nainar Nagendran on Chennai Municipal Toilet : சென்னையில் மாநகராட்சி கழிவறை பராமரிப்புக்கு திமுக அரசு 1,000 கோடியை செலவிட்டும், தரம் மோசமாக இருப்பதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
BJP President Nainar Nagendran on Chennai Municipal Toilet
BJP President Nainar Nagendran on Chennai Municipal Toilet
1 min read

கழிவறைகளை சுத்தம் செய்ய ரூ.1,000 கோடி :

Nainar Nagendran on Chennai Municipal Toilet : இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநக​ராட்​சி​யின் 1,260 இடங்​களில் உள்ள 10,000 பொதுக் கழி​வறை​களை சுத்​தம் செய்​வதற்​காக, தூய்மை இந்​தியா திட்​டத்​தின் கீழ் ரூ.620 கோடி​யும், ராயபுரம் மற்​றும் திரு​விக நகர் மண்​டலங்​களில் உள்ள பொதுக் கழி​வறை​களைத் தனி​யார்​ மய​மாக்​கு​வதற்கு ரூ.430 கோடி​யும் என திமுக ஆட்​சி​யில் இது​வரை சுமார் ரூ.1000 கோடி செல​விடப்​பட்​டும் பொதுக் கழி​வறை​களின் தரம் மிக மோச​மாக உள்​ளது தெரிய வந்திருக்கிறது.

கழிவறைகளில் அடிப்படை வசதி இல்லை :

தற்​போதுள்ள முக்​கால்​வாசி பொதுக் கழி​வறை​கள் தண்​ணீர், கதவு, தாழ்ப்​பாள் போன்ற அடிப்​படை வசதி​கள் இல்​லாமல் தரையெல்​லாம் கறைபடிந்து, துர்​நாற்​றம் வீசுகின்றன என்​பது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்​சம் போட்​டுக் காட்டுகிறது.

காணாமல் போன மகளிர் கழிவறைகள் :

2023ல் மகளிர் நலனுக்​காக ரூ.4.5 கோடி நிதி செல​வில் அறி​முகப்​படுத்​தப்​பட்ட “ஷீ டாய்​லெட்" என்ற நடமாடும் மகளிர் கழி​வறை​கள், ஒராண்​டுக்​குள் காணா​மல் போய் விட்ட நிலை​யில், மீதமிருக்​கும் கழி​வறை​களும் மக்​கள் பயன்​படுத்த முடியாத நிலை​யில் கிடப்​பது மிகப்​பெரும் சுகா​தார சீர்​கேட்​டுக்கு வழி​வகுக்​கும் என்​பது ஆளும் அரசுக்கு தெரி​யா​தா?

அலங்கோல பராமரிப்புக்கு ஆயிரம் கோடியா? :

அலங்கோல​மாகக் காட்​சி​யளிக்​கும் கழி​வறை​களைப் பராமரிக்க ஆயிரம் கோடி ரூபாய் செல​வானது என அரசு கணக்கு காட்​டு​வது யார் காதில் பூ சுற்​று​வதற்​காக? இவர்​கள் கொள்​ளை​யடிக்​கும் மக்​கள் பணம் யாருக்கு செல்​கிறது, எங்கே செல்​கிறது? ஊழல் முறை​கேடு​களுக்​குப் பெயர் போன திமுக, தனது ஆட்​சி​யின் இறு​திக் காலத்​தில் கழி​வறை​யிலும் கொள்​ளை​யடித்து கஜா​னாவை நிரப்​பிக் கொள்ள துணிந்​துள்​ளது அரு​வருக்​கத்​தக்​கது. இந்த ஆட்​சியை அரியணை​யில் இருந்து அகற்​றி​னால் மட்​டுமே தமிழகம் புத்​துணர்வு பெறும்” இவ்வாறு தனது அறிக்கையில் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் படிக்க : நெல்லை ஆணவப் படுகொலை : வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in