Anbumani: ’தூய்மைப் பணியாளர்களை சுரண்ட வேண்டாம்’: அன்புமணி விளாசல்

Anbumani on Sanitary Workers : தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள். சமுகநீதி என்ற பெயரில் சுரண்டக் கூடாது என்று, அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
PMK Leader Anbumani on Sanitary Workers Protest
PMK Leader Anbumani on Sanitary Workers Protest
1 min read

தலைவர்களின் பேச்சு, சந்தேகம் வருது :

Anbumani on Sanitary Workers : இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அன்புமணி, “தூய்மை பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால், அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் போலாகி விடும். எனவே அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று சில தலைவர்களால் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை சொல்லப்பட்ட காலமும், சூழலும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

பாமக நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை :

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்க வேண்டும்; அவர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை.

திமுக அரசு மீது கோபம் :

சென்னையில் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக போராட்டம்(Sanitary Workers Protest in Chennai) நடத்திய போதும், கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர்களின் மீது அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டதால் தமிழ்நாடு அரசின் மீது ஒட்டுமொத்த தமிழகமும் கோபத்தில் இருக்கிறது. அப்படி இருக்கையில், சில தலைவர்களின் கருத்துகள் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.

தூய்மை பணியாளர்களுக்கு மாற்று பணிகள் :

தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது பணியாளர்களின் நுரையீரலை பாதிக்கும் என்பது மட்டுமின்றி, அது கண்ணியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்காது. எனவே, அதற்கு முன்பாக தூய்மைப் பணியில் இருந்து மீட்கப்படும் பணியாளர்களுக்காக என்னென்ன மாற்றுப் பணிகள் வழங்கப்படவுள்ளன என்பதை அரசு வரையறுக்க வேண்டும்.

பணியாளர்களுக்கு துணை நிற்க வேண்டும் :

உதாரணமாக, ஒரு தூய்மைப் பணியாளர் 5 அல்லது 7 ஆண்டுகள் பணி செய்த பின் அப்பணியில் இருந்து மீட்கப்படும் போது அவருக்கு அரசுத் துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்ற நிரந்தரப் பணி வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இயல்பாக கிடைக்கும் ஓய்வுக்கால பயன்களை விட கூடுதலாக 50% மானியத்துடன் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கி தொழில் முனைவோர் ஆக்குதல் போன்ற மாற்று வாழ்வாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

மேலும் படிக்க : Chennai Protest : சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

துரோகம் இழைக்காதீங்க :

இது பற்றியெல்லாம் எதுவும் பேசாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது” இவ்வாறு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in