TN Rain : தீவிரம் அடைந்த பருவமழை : வேகமாக நிரம்பும் அணைகள், ஏரிகள்

TN Rain Update : தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், அணை​கள், ஏரி​கள் வேகமாக நிரம்​பி​ வருகின்றன.
Northeast Monsoon intensifies in Tamil Nadu, Dams and Lakes are filling up rapidly
Northeast Monsoon intensifies in Tamil Nadu, Dams and Lakes are filling up rapidly
1 min read

வடகிழக்கு பருவமழை :

TN Rain Update : தமிழகத்​தில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று, வடகிழக்கு பரு​வ​மழை கடந்த 16ம் தேதி தொடங்​கியது. அன்று முதல் தமிழகம் முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறா விட்டாலும், கரையை நோக்கி நகர்வதால், வட தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

நிரம்பும் ஏரிகள், அணைகள்

இதனால் அணை​கள், ஏரி​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. ஏற்​கெனவே நிரம்​பி​யுள்ள நீர்​நிலைகளுக்கு வரும் தண்​ணீர் அப்​படியே வெளி​யேற்​றப்​படு​கிறது. உபரிநீர் வெளி​யேறும் நீர்​நிலைகளை உன்​னிப்​பாக அதி​காரி​ள் கண்காணித்து வருகிறார்கள்.

தமிழகத்​தில் சென்​னை, மதுரை, கோவை, திருச்சி மண்​டலங்​களில் உள்ள 90 அணை​கள் மற்​றும் நீர்த்​தேக்​கங்​களில் மொத்த கொள்​ளளவு 224 டிஎம்சி (2.24 லட்​சம் மில்​லியன் கன அடி) ஆகும். தற்போதைய நிலவரப்படி 196 டிஎம்சி (87.77 சதவீதம்) நீர் இருப்பு உள்​ளது.

மாநிலம் முழு​வதும் 38 மாவட்​டங்​களில் மொத்​தம் 14,141 ஏரி​கள் உள்​ளன. இவற்​றில் 1,522 ஏரி​கள் முழு​வது​மாக நிரம்​பி​யுள்​ளன. அதி​கபட்​ச​மாக கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் 390 குளங்​கள் நிரம்​பி​ விட்டன. 77 முதல் 99 சதவீதம் வரை 1,832 ஏரி​களும், 51 முதல் 75 சதவீதம் வரை 1,842 ஏரி​களும் நிரம்​பி​யுள்​ளன. அதே​சமயம், 620 குளங்​கள் தண்​ணீர் இல்​லாமல் வறண்டு கிடக்​கின்​றன.

75% நிரம்பிய சென்னை குடிநீர் ஏரிகள்

சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதா​ர​மாக விளங்​கும் பூண்​டி, சோழ​வரம், செம்​பரம்​பாக்​கம், தேர்​வாய்க்கண்​டிகை, வீராணம் ஆகிய ஏரி​களின் மொத்த கொள்​ளளவு 13,222 மில்​லியன் கன அடி. நேற்​றைய நில​வரப்​படி நீர் இருப்பு 9,986 மில்​லியன் கன அடி​யாக (75.53 சதவீதம்) உள்​ளது. இதே தேதி​யில் கடந்த ஆண்டு நீர் இருப்பு 6,105 மில்​லியன் கன அடி​யாக இருந்​தது.

மேலும் படிக்க : தீவிரம் பெறும் தாழ்வுப்பகுதி : 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நீர்வரத்து கண்காணிப்பு, வெளியேற்றம்

செம்​பரம்​பாக்​கம், புழல், பூண்டி ஆகிய​வற்​றில் முன்​கூட்​டியே வெள்ள நீர் திறக்​கப்​பட்டு போது​மான இடைவெளி பராமரிக்​கப்​பட்டு வரு​ வ​தால், மிக கன மழை பெய்​தா​லும், வெள்ள நீர் திறப்​பின் அளவு மட்​டுப்படுத்​தப்​பட்டு அடை​யாறு மற்​றும் கொசஸ்​தலை ஆற்​றில் பாது​காப்​பாக கடலைச் சென்​றடை​யும். மழை தீவிரம் அடைந்தால், நிலைமையை சமாளிக்கும் வகையில் தண்ணீர் திறப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in