விநாயகர் சதுர்த்தி : "எண்ணங்கள் ஈடேறி வெற்றிகள் பெருகட்டும்" : முதல்வர் விஜய் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி 2026: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Vinayagar Chaturthi  CM Vijay Wish
Vinayagar Chaturthi CM Vijay Wishsource:thamizhalai,ai generated
1 min read

நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 14) விநாயகர் சதுர்த்தி விழா மிகக் கோலாகலமாக மற்றும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் மக்களுக்குத் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி கோலாகலக் கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

பிரம்மாண்ட சிலைகள்

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளும், வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி மக்கள் வழிபாடு

மேலும், பூக்கள், பழங்கள், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் ஆகியவற்றை விநாயகருக்கு நைவேத்தியமாகப் படைத்து மக்கள் தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் விஜய்யின் வாழ்த்துச் செய்தி

விநாயகர் சதுர்த்தி விழாவைக் முன்னிட்டுத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் விஜய் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

"விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!"

என்று முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உக்ரைன் போரை நிறுத்த மோடி, ஜின்பிங் ஆர்வம், உதவத் தயார் என அறிவிப்பு : ரஷ்ய அதிபர் புதின் வரவேற்பு...!

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in