தொடரும் ஈரான் இஸ்ரேல் போர்
Mojtaba Khamenei Iran Attack Gulf Countries : ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குல் தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கிறது .இதனால் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது
அரபு நாடுகள் மீதம் தாக்குதல் தொடரும்-மோஜ்தபா காமேனி
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச மதகுருவான அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதையடுத்து ஈரானின் புதிய உச்சத் தலைவராக அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி (56) அண்மையில் தேர்வானார்.
மூத்த மதகுரு இழப்பு மற்றும் பல எண்ணிக்கையிலான குழந்தைகளின் இழப்பு ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இதற்கு பதிலடியாக அரபு நாடுகள் மீதான தாக்குத்தால் தொடரும் என்றும் அறிவிப்பு விடுத்துள்ளார்
மோஜ்தபா காமேனியின் முதல் அறிவிப்பு
ஈரானின் புதிய மதகுருவாக பதியேற்றுள்ள மோஜ்தபா காமேனி தனது புதிய அறிவிப்பாக வளைகுடாவிலுள்ள அரபு அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் தொடரும் என்றும் , அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு தாக்குதலாக, ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து மூடிவைப்போம் என்றும் எச்சரித்துள்ளது
மேலும் படிக்க :ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் : 1,000ஐ தாண்டிய உயிரிழப்பு : தற்போதைய நிலவரம் என்ன?
அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நேரத்தில் 165 பள்ளி மாணவிகளை இஸ்ரேல் இழந்திருக்கிறது இந்த தாக்குதல் உட்பட எங்களைத் தாக்கியவர்களுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம்.
எங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்கு நாங்கள் பழிவாங்குவோம் என்று மோஜ்தபா காமேனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குல் தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கிறது .இதனால் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது