சவுதி அரேபியாவில் இந்தியர்கள் பலி: இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

PM Modi Condoles Saudi Arabia Bus Accident: சவுதி அரேபியாவில் இருந்து உம்ரா புனித பயணத்திற்கு பேருந்தில் சென்ற 43 இந்தியர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
Prime Minister Modi expresses condolences over deaths of Indians in Saudi Arabia!
Prime Minister Narendra Modi expresses condolences over deaths of Indians in Saudi ArabiaGoogle
1 min read

டேங்கர் லாரி மீது மோதி பேருந்து விபத்து

PM Modi Condoles Saudi Arabia Bus Accident : மெக்கா, சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொள்வோர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

43 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த பேருந்து அதிகாலை 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ளலாம்

இதில், பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இந்த விபத்தில் ஒரே ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

அவர்கள் அனைவரும் மெக்காவுக்கு சென்று உம்ரா சடங்குகளை முடித்து விட்டு, மெதீனாவுக்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க சவுதி அரசு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. இதன்படி, விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த விபத்து தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரேவந் ரெட்டி எக்ஸ் பதிவு

இவரைத்தொடர்ந்து சவுதி அரேபியா விபத்து மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, வெளியுறவு அமைச்சகம் மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், தெலங்கானா மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் துணை நிற்கும் என்றும் ரேவந்த் ரெட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in