’சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம்’ : 200 ஆண்டு வரலாற்று ஆவணம்

Tharman Shanmugaratnam on Singapore Tamil Encyclopedia : 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார் அந்நாட்டு, அதிபர் தர்மன் சண்முகரத்னம் வெளியிட்டார்.
Singapore Tamil Encyclopedia Historical Document Released President Tharman Shanmugaratnam
Singapore Tamil Encyclopedia Historical Document Released President Tharman Shanmugaratnam
1 min read

சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் :

Tharman Shanmugaratnam on Singapore Tamil Encyclopedia : கடல் கடந்து வாணிபம் செய்து பொருளீட்டிய தமிழர்கள், பல்வேறு நாடுகளில் குடியேறி, பாரம்பரிய பெருமைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்தவகையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூரில் கால்பதித்த தமிழர்கள், இன்று வரை அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். அவர்களின் வரலாற்றை ஆணவப்படுத்தும் வகையில், ’ சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம்’(Singapore Tamilar Kalai Kalanjiyam) என்ற ஆவணப் பெட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. 'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார்.

தமிழர் வாழ்வியலை பேசும் ஆவணம் :

200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ்(Singapore Tamil) மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. இதை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ”தமிழ்ச் சமூகம் கண்​டு​வந்த சமூகச் சீர்​திருத்​தங்​கள் குறித்த தகவல்​களை எடுத்துக் கூறினார். பண்​பாட்டை பேணும் உறை​விட​மாக சிங்​கப்​பூர் தொடர்ந்து திகழ வேண்​டும்.

தனித்துவம் மிக்க சிங்கப்பூர் :

பண்​பாடு​களைப் பாது​காக்​கக்​கூடிய இடமாக நமது நாடு இருக்க வேண்​டும். இதுவே உலகளா​விய இந்​திய சமூகத்​துக்கு மத்​தி​யில் சிங்​கப்​பூர் தமிழர்​களை​யும் சிங்​கப்​பூர் இந்​தி​யர்​களை​யும் தனித்​து​வ​மிக்​கவர்​களாகத் திகழச் செய்​யும்’’ என்​றார்.

சிங்கப்பூரின் முதல் தகவல் களஞ்சியம் :

சிங்கப்பூர் தமிழ்ப் பண்​பாட்டு மைய​மும் தேசிய நூலக வாரிய​மும் இணைந்து உரு​வாக்கி உள்ள ‘சிங்கப்பூர் தமிழர்க் கலைக்​களஞ்​சி​யம்’ மின் நூல், நாட்​டில் தமிழிலும் ஆங்​கிலத்​தி​லும் உரு​வான முதல் கலைக்​களஞ்​சி​யம் என்ற சிறப்​பினை பெற்று இருக்கிறது. ஏறத்​தாழ 375 பகு​தி​களில் பல்​வேறு தகவல்​களை விவரிக்​கும் துல்​லிய​மான பதிவு​கள் தகுந்த ஆதா​ரத்​துட​னும் புகைப்​படங்​களு​ட​னும் தேசிய நூலக வாரி​யத்​தின்(National Library Board) மின்​தளத்​தில் இடம்​பெற்​றுள்​ளன.

எதிர்கால சந்ததியினருக்கான கருவூலம் :

சிங்கப்பூர் தமிழ்ப் பண்​பாட்டு மையத்​தின்(Centre for Singapore Tamil Culture) தலைமை நிர்​வாகி​யும் தொகுப்​பின் ஆசிரியரு​மான அருண் மகிழ்​நன் பேசும்​போது, ‘‘இந்த மின் நூல் மக்​களைப் பற்றி மக்​களால் உரு​வாக்​கப்​பட்ட தேர். இந்த அருஞ்​செல்​வம் உருப்​பெற உதவி புரிந்​தோருக்கு நன்​றி. இதனை வாழும் களஞ்​சி​ய​மாக நிலைக்​கச் செய்ய, முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படும்’’ என்​றார்.

தேசிய நூலக வாரிய தமிழ்​மொழிச் சேவை​கள் பிரி​வின் துணை இயக்​குநரு​மான அழகிய பாண்​டியன் மேலும் கூறும்​போது, ‘‘இந்​தக் கலைக்​களஞ்​சி​யத்தை உரு​வாக்​கு​வதற்​கான மூன்று ஆண்​டுப் பயணம் சுவாரசி​ய​மானது. எதிர்​காலச் சந்​த​தி​யினருக்​கான ஒரு கரு​வூலத்தை உரு​வாக்​கு​வ​தில் பங்​காற்ற கிடைத்த வாய்ப்​பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்றார்.

மேலும் படிக்க : சிங்கப்பூர் அருகே புதிய நாடு : இந்திய வம்சாவழி தொழிலதிபர் முயற்சி

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in